From eMagics |
பொதுவாக எந்த சத்தமாக இருந்தாலும் எதிரொளிப்பதற்கான சூழல் அமைந்திருக்கையில் அது எதுரொளித்தே தீரும். அப்படியிருக்க வாத்துக்களின் சத்தம் மட்டும் எதிரொளிக்காது என்று ஒரு நம்பிக்கை இருந்து வந்தது.அது எப்படி,வாத்து எழுப்பும் சத்தமும் சத்தம்தானே.இது என்னடா புதிராக இருக்கிறதே என்கிறீர்களா.
From eMagics |
இந்த விஷயம் பலருக்கு புதிராகத்தான் இருந்தது.அதனால் தான் இங்கிலாந்தை சேர்ந்த சால்ஃபொர்டு பல்கலைக்கழகம் இந்த நம்பிக்கை உண்மையானதா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டது.அதற்கான லிங்க் இங்கே.
From eMagics |
இதற்காக அவர்கள் டெய்சி என்ற வாத்தை ,செவிப்புலன் மற்றும் எதிரொளியை ஆய்வு செய்வதற்கான பிரத்தியேக பரிசோதனைக் கூடத்திற்கு எடுத்து சென்று ஆய்வை மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில் அவர்கள் கண்டது என்னவென்றால் வாத்து எழுப்பும் ஒலியும் எதிரொளிக்கும்.
ஆக மொத்தத்தில் தெரிகிறதென்னவென்றால் இதை நம்பியவர்கள் எல்லாம் வாத்து மடையர்கள் என்பதல்ல,பலரும் இதை நம்பி வந்ததற்கான் காரணத்தை ஆய்வாளர்கள் பலவாறாக கூறுகிறார்கள்.
From eMagics |
அவற்றை இங்கே காண்போம்:
1)வாத்துக்கள் எழுப்பும் சத்தம் மற்ற சத்தங்களை போலல்லாமல் அதன் இறுதி அந்தம் மெதுவடைந்துவிடுகிறது,அதனால் அது எதிரொளித்தாலும் மற்றவர்களுக்கு கேட்பதில்லை.
2)அதைப்போலவே இன்னும் ஒரு நுனுக்கமான் தகவல் என்னவென்றால் ,அதன் எதிரொளியும் உண்மையான சத்தத்தை போலவே இருப்பதால் ,இவ்விருவற்றையும் பிரித்து உணர முடியாமல் போய்விடுகிறது என்கிறார்கள்.
3)பொதுவாக வாத்து வாழும் இடங்கள் எதிரொளிப்பதில்லை.அதனால் இது அதிகம் உணர வாய்ப்பில்லாத ஒன்றாக அமைந்துவிடுகிறது.
From eMagics |
எதுஎப்படியோ ,நமக்கு தெளிவாக தெரிந்துவிட்டது,இவ்வாறு அறிவியல் என்ற ஒன்று, இயற்கையில் இருக்கும் பற்பல புதிணங்கள் மனித வாழ்விற்கு உதவியாக மாற்றி பெரும் வரத்தை தருகிறது அதே அறிவியல் அழிவிற்காக பயன்படுத்தப்பட்டு சாபத்தை கொடுக்கிறது.எல்லாம் இயற்கையே!
From eMagics |
ஆனால் எனக்கு இன்னும் புதிராக உள்ளது, இந்த வாத்து மடையன் என்ற வார்தை எப்படி வந்ததென்று? ;-) Leia Mais…